பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் "பிரெக்சிட் ஒப்பந்தம்"... வெளிவந்த தகவல்..!!

பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு பிரித்தானியாவை இணங்க வைப்பதற்கு நடவடிக்கைகளை எடுக்க ஐரோப்பிய ஒன்றியம் தயாராக இருக்கிறது.
ஐரோப்பா வானொலி உடனான நேர்காணலில் பிரித்தானியா ஆதரவுடைய ஜெர்சி தீவு, பிரான்ஸ் மீன்பிடி கப்பல்களுக்கு அனுமதி மறுத்துள்ளது. இதனால் பிரான்ஸ் கடும் ஆத்திரத்தில் இருக்கின்றது. இதற்கு முன்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் முன்னாள் தலைமை பிரெக்சிட் Michel Barnier மூலமாக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தை மேற்கொள்ளப்பட்டது .
அந்த ஒப்பந்தம் 100 சதவீதம் அமல்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு அமல்படுத்தப்படவில்லை என்றால் பிரித்தானியாவுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்னும் சில தினங்களில் ஐரோப்பிய ஒன்றியம் அளவில் அல்லது தேசிய அளவில் நடவடிக்கை எடுக்கப்படும. இந்த பிரச்சனை தொடர்பாக ஐரோப்பிய நாடுகளின் அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
ஆகவே நலன்களை பாதுகாக்க வெளியுறவுத்துறை மூலம் முடியாத பட்சத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். அதிலும் குறிப்பாக பிரித்தானியா, ஐரோப்பா கண்டத்தில் இருந்து பெறும் எரிசக்தி விநியோகத்தை சார்ந்துள்ளது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இந்த தகவலை பிரான்ஸ் ஐரோப்பிய விவகார அமைச்சர் Clement Beaune கூறியுள்ளார் .



